27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இறுதி தருணத்தில் மாறிய முடிவு! மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கசிந்த தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்படுவார் என கூறப்படுகின்றது.

இதேவேளை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று(07) அறிவிக்கப்படுவார் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானம் பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று(06) பத்தரமுல்லை, நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.  

Related posts

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் பறிமுதல் !

User1

தமிழர்களை இளிச்ச வாயர்கள் என நினைக்கிறாரா அநுர – சபா குகதாஸ் சீற்றம்!

User1

வடக்கு பாடசாலைகளில் ஏற்பட்ட குழப்பம்..!

sumi

Leave a Comment