27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – ஏறாவூரில் சம்பவம் !

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வரகாபொல, நெவ்கல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்

User1

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு

User1

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர்கள் தினம் இன்று

User1

Leave a Comment