28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

 நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் மரணம்

நுவரெலியாவில் இருந்து பெந்தொட்டை நோக்கி வேனில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 35 வயதான இந்தோனேசிய சுற்றுலா பயணியான ஐம் ஆலிம் சப்ரி நுவரெலியாவிலிருந்து ஹட்டன் ஊடாக பெந்தொட்டை நோக்கி தனியார் வேனில் பயணித்த போது திடீரென சுகவீனமடைந்த நிலையில் டிக்கோயாவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாவட்ட முதன்மை மருத்துவமனை மற்றும் உள்ளது

 நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகவும், குறித்த நபரின் சடலம் டிக்கோயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

 இது தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம் பெற்று வருகிறது என ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

Related posts

இதுவரை 87 இலட்சம் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு !

User1

சரணடைந்த புலிகள் எங்கே? நீதிமன்றுக்கு போகும் இராணுவம்

sumi

கிரிக்கெட் அணி தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் !

User1

Leave a Comment