27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மற்றும் நாளை பணியை விட்டு வெளியேறுவோம் என்று கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.   

Related posts

மன்னாரில் கவனிப்பார் அற்று இருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபி

User1

சிங்கள தேசத்தின் அடிமையில் இருந்து தமிழர்கள் விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது

sumi

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை

User1

Leave a Comment