27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

26 வயதுடைய நபரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் கவுந்திஸ்ஸ புர, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தேங்காய்க்கு தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் !

User1

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

sumi

அதிகளவான அரசியல் கட்சிகள் ரணிலுடன் கூட்டு! அடுத்த வாரம் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்புகள்

User1

Leave a Comment