27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து  மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15.08.2024) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் நுணாவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே இவ்வாறு கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை

sumi

பண்டங்கள் இறக்குமதி வரியைத் திருத்த அமைச்சரவை அனுமதி !

User1

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 20,000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம் !

User1

Leave a Comment