27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு

2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரனின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதுமாக நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

18.08.2024 ஞாயிறு  காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் மலர்;வணக்கம் செலுத்துவார்.அதன்பின் ஆலய, தேவாலய வழிபாடுகளைத் தொடர்ந்து பிற்பகல் முள்ளிவாய்க்காலில் மலர்வணக்கம் செலுத்தப்படும்.

பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறும். 

அதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி ஆகஸ்ட் 19 – 25 வரை  யாழ்ப்பாணத்திலும், 26-29 வரை கிளிநொச்சியிலும், ஆகஸ்ட் 30 – செப்ரெம்பர் 03 வரை முல்லைத்தீவிலும், செப்ரெம்பர் 04 – 06 வரை மன்னாரிலும், செப்ரெம்பர் 07-09  வரை வவுனியாவிலும், செப்ரெம்பர் 10-12 திருகோணமலையிலும், செப்ரெம்பர் 13-14 அம்பாறையிலும், செப்ரெம்பர் 15-19 வரை மட்டக்களப்பிலும் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடைபெறும்.

Related posts

7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

sumi

பதினாறு வயது சிறுவன் கடத்தல் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது!

User1

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!

sumi

Leave a Comment