29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

கணவரினால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான புத்தளம் – வென்னப்புவ பகுதியை சேர்ந்த சங்கவேல் சுசீலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பணப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்று அங்கு திருமணத்திற்குப் புறம்பான உறவினால் நாடு திரும்பி அதே திருமணத்திற்குப் புறம்பான கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது, ​​சட்டப்பூர்வ கணவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனது குழந்தையின் பிறந்த நாளிற்கு கடந்த 10 ஆம் திகதி வருதை தந்த நிலையில், 14ம் திகதி வரை, அந்த வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி இரவு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மனைவியின் உடலில் கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வவுனியா – புளியங்குளத்தில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

sumi

பெண்ணின் சடலம் மீட்பு.!

sumi

லண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!

sumi

Leave a Comment