27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தேரருடன் ஐவர் கைது

மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட ஐவரை சந்தேகத்தின் பேரில் (19) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகொட கழுஎபே வனப்பகுதியில் சிலர் புதையல் தோண்டுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மொகடவெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தேரரொருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனையோர் அகலவத்த மற்றும் அடியாகல பகுதிகளைச் சேர்ந்த 25 ,33, 36 மற்றும் 58 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்…!

sumi

புதிய கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சை -சற்று முன் வெளியான தகவல்..!

sumi

பதுளை- கோட்டை ரயில் தடம்புரண்டது

sumi

Leave a Comment