27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், கிரிஸ்தவ தேவாலயத்தின் முன் ஆராதனை செய்த மக்கள்

திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டனர்.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான போதகர் சிவா இமானுவேல் தெரிவித்தார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டிடம் அமைத்து பல வருடங்களாக சுமார் 100 அங்கத்தவர்களுடன் வழிபாட்டில் ஈடுபடுகிறோம் எமது மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடவும் எமது ஆராதனைகளை மேற்கொள்ளவும் உடனடியாக வழி வகை செய்து தாருங்கள் எனவும் பிரதான போதகர் மேலும் தெரிவித்தார்.

ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் வீதி அருகில் மதக்கடமைகளை நிறைவேற்றினர்.

Related posts

சில இடங்களில் மழை !

User1

இலங்கை வீரர் தகுதி நீக்கம் : விதிமீறல் குற்றச்சாட்டு

User1

முருங்கை செய்கையாளர்கள் முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு

User1

Leave a Comment