27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

தெதுரு ஓயாவில் மூழ்கிக் காணாமல் போன தாய் , மகனின் சடலங்கள் மீட்பு

தெதுரு ஓயாவில் மூழ்கிக் காணாமல் போயிருந்த தாயார் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

33 வயதுடைய தாயாரும் 07 மற்றும் 05 வயதுடைய இரண்டு மகன்களும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெதுரு ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, தாயாரும் இரண்டு மகன்களும் திடீரென நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில் ஒரு மகன் மாத்திரம் முதலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர், பொலிஸார் இணைந்து காணாமல் போன தாயாரையும் மற்றைய மகனையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, காணாமல் போன தாயாரும் மற்றைய மகனும் குருணாகல் – போகமுவ மஹா மூக்கலனாய பெரஹேனவத்த பிரதேசத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

User1

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

User1

Chelsea to buy Alex Sandro, Alexis Sanchez to appease Antonio Conte

Thinakaran

Leave a Comment