28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

புதுக்குடியிருப்பில் ஆறு இளைஞர்கள் கைது

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல்  கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில், திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் சிறு சிறு 7 பொதிகளில் 90மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் ஆகிய இளைஞர்கள் ஆவார்.

குறித்த இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? ரங்கேஸ்வரன் கேள்வி!

User1

அநுராதபுரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வைத்தியர்

User1

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

User1

Leave a Comment