27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வடக்கு , கிழக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் : வேலுகுமார் MP

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் இன்று பலர் அரசியல் வரப்பிரசாதங்களை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பொது வேட்பாளராக இருந்தாலும் அல்லது. ஏனைய வேட்பாளராக இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

நாட்டை நெருக்கடியில் இருந்து தலைவருடம் மக்கள் இன்ற இணைந்துள்ளனர். 22 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார்” என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் குறிப்பிட்டாா்.

Related posts

ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் எச்சரிக்கை

User1

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

User1

தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

User1

Leave a Comment