29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொன்வெல்ல வனப்பகுதியில் நேற்று (28) பிற்பகல் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு முழுவதும் குறித்த வனப்பகுதியில் தீ வேகமாகப் பரவியுள்ளதால் பத்து ஏக்கருக்கும் அதிகமான  நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  

கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது யாரேனும் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று (29) காலை குறித்த வனப்பகுதியில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை !

User1

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.

sumi

கிளிநொச்சியில் தோழர் 30 நிகழ்வு

User1

Leave a Comment