29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் சுகயீனம் காரணமாக கிரிந்த பிரதேசத்திலிருந்து கிரில்ல பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்துகளை எடுப்பதற்குச் சென்றுள்ளார்.

பின்னர், இவர் வைத்தியசாலையில் மருந்துகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது வீதியிலிருந்து குளவி கூடு ஒன்று கலைந்ததில் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Related posts

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

User1

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி !

User1

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது !

User1

Leave a Comment