27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்!

திருகோணமலையுல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மூலமாக போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு குறித்த போராட்டமானது திருகோணமலை கடற்கரைக்கு முன்னாள் இடம்பெற்றது.

OMP ஒரு ஏமாற்று நாடகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை, சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறலை நாங்கள் கோருகிறோம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி ஈகை சுடறினை ஏற்றியும் அழு குரல்களை முன்வைத்து நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்…பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்றும் இதன் போது இடம்பெற்றது. 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல உறவுகள் இதில் கலந்து கொண்டனர்..

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – ஏறாவூரில் சம்பவம் !

User1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

sumi

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் சிவில் உடையில்  பணியாற்றும் ஊழியர்கள்..!

sumi

Leave a Comment