29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் மனைவி படுகாயம் – கணவன் கைது

பதுளை – ஹிந்தகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து குறித்த பெண்ணின் கணவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பெற்றெடுத்த போலீசார்….!

User1

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

User1

அவிசாவளையில் ஒருவர் மரணம்.!

sumi

Leave a Comment