27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பராலிம்பிக் சக்கர இருக்கை டென்னிஸ்: 2ஆம் சுற்றில் தோல்வி அடைந்தார் தர்மசேன

பாரிஸ், ரோலண்ட் கெரோஸ்  9ஆம் இலக்க டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கையின் சுரேஷ் தர்மசேன தோல்வி அடைந்தார்.

சக்கர இருக்கை டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் 5ஆம் இடத்திலுள்ள பிரித்தானிய பராலிம்பிக் வீரர் கோர்டன் ரீட் என்பவரிடம் 2 நேர் செட்களில் (6 – 0, 6 – 0) சுரேஷ் தர்மசேன தோல்வி அடைந்தார்.

50 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இந்தப் போட்டியின் இரண்டு செட்களிலும் சுரேஷ் தர்மசேன ஒரு புள்ளியும் பெறாதபோதிலும் குறைந்தது 8 ஆட்டங்களில் திறமையாக விளையாடியிருந்தார். அந்த 8 ஆட்டங்களிலும் சம அளவில் மோதிக்கொண்ட தர்மசேன, அட்வான்ஸ் (advance) கட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிகளைப் பெறத் தவறினார். 

இந்தப் போட்டி முடிவுடன் இலங்கை பராலிம்பியர்கள் இருவர் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

ஆண்களுக்கான S6 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நவீத் ரஹீம் 7ஆம் இடத்தைப் பெற்று வெளியேறியிருத்தார்.

Related posts

உதவி ஆசிரியர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் செய்ய முடியாது !

User1

மலைநாட்டு நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாகக் குறைவு.!

sumi

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

User1

Leave a Comment