27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது – டக்ளஸ் தேவானந்தா

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சியினுடைய தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம்.

நான் தேர்தல் திகதி ஆரம்பக்க முன்னரே ரணில் விக்ரமசிங்க தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு எனது ஆதரவை வழங்கினேன்.

மக்கள் வரிசை யுகத்தில் பட்ட துன்பத்தை இன்னும் மறக்கவில்லை. அதனை நீக்கிய தலைவர் ரணில் விக்ரமசிங்க. அதனையும் மக்கள் மறக்கவில்லை.

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள்.

ஏனெனில் கடந்த கால அனுபவம் இதற்கு நல்ல உதாரணம். ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாமல் தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் தெற்கு மக்களாக இருந்தாலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் அதிகப்படியான வாக்குகள் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

மக்களின் ஆதரவு எனக்கு பலமடையும் சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவாகவும் சாணக்கியமாகவும் செய்து முடிப்பேன். 

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் நாட்டை மீண்டும் பாதாள நிலைக்கு கொண்டு செல்ல நாட்டு மக்கள் தயாரில்லை.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவையோ அல்லது தமிழ் மக்களையோ பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.

Related posts

எத்தியோப்பியப் பெண் கண்டியில் கைது

sumi

தமிழர் பகுதியில் பெரும் சோகம்-இருவர் பலி..!

sumi

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பெற்றெடுத்த போலீசார்….!

User1

Leave a Comment