27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பதுளை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03)  கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை வெவஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை கொண்டு வந்து பதுளை பகுதியில் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 345 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரபோ சானக்க தலைமையில் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து,விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றில்  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு வளத்தாப்பிட்டி யில் நடமாடும் வைத்திய சேவை

sumi

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

User1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் நீக்கப்பட்ட முக்கிய பதவிகள்

Nila

Leave a Comment