28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளது.   

இதேவேளை,  இன்று 04ம் திகதி முதல்  06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

மேலும்,  மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வாக்களிக்கின்றனர்..   

அத்துடன்,  வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் முகநூல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள்

User1

நாட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது

User1

Leave a Comment