27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பாடசாலை சிறார்களின் மாதிரி சந்தை!!

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை (04.09.2024) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது 

மாணவர்களுக்கு பொருட்களின் விலை மற்றும் பணத்தின் பெறுமதியை கற்பிப்பதை நோக்கமாக கொண்டு குறித்த சந்தை நடாத்தப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தொழில் வழிகாட்டல் ஆலோசனை வளவாளர் திருமதி.ஜெயவதனி கஸ்ரன் ரோய் சந்தை நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் 

சிறுவர்களின் சந்தையில் பலசரக்கு பொருட்கள், மரக்கறி வகைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பழவகைகள் என பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.

சந்தையில் பெருமளவான ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு தமக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்ததுடன், சிறார்கள் ஆர்வத்துடன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மொட்டுக் கட்சியின் 72 பேர் ரணில் பக்கம்

User1

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு !

User1

தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும்..! வேந்தன் கேரிக்கை.

User1

Leave a Comment