28 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும், பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களை பதிவு செய்துள்ளனர். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் நாட்டில் உள்ளனர்.

அரச அதிகாரிகளின் மூளைகளும், மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களிடம் தற்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை நம்ப வைத்துள்ளனர்.

இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமைதான் காணப்பட்டிருந்தது. வடக்கிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லவிருந்த போது அங்கு அதிகளவான படுகொலைகள் இடம்பெற்றன.

இன்றைய காலகட்டதிலும் அவ்வாறு இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான். ஆனால், தோல்வியடைந்த பின்னர் மீண்டும் போராடச் சொன்னால், அல்லது நாடாளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.

எனவே இதனை தடுக்கவேண்டும். நான் இன்றிலிருந்து சுயேட்சை உறுப்பினராமாறி அவர்களை தோற்கடிக்கவேண்டும். இதனை செய்வற்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொள்வேன்” இவ்வாறு அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று சிறப்பாக நடைபெற்ற அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் !

User1

தென் ஆபிரிக்க ஏ அணியை வெற்றிகொண்டது இலங்கை ஏ அணி

User1

யாழில் 14 சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பெரியப்பா கைது.

sumi

Leave a Comment