27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 47 பேர் காயம் !

மொனராகலை பிபில நாகல பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தானது, நேற்று (05) இரவு 7.30 மணியளவில் பிபில – அம்பாறை வீதியில், நாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், பின்னால் அதே திசையில் சென்ற பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பஸ்ஸின் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2 பஸ்களிலும் பயணித்த 47 பயணிகள் விபத்தில் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், ஊழியர்கள் இறங்குவதற்காக நின்ற போது மற்ற பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம் உயிரிழப்பு

User1

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை

User1

சிறுவர்களைச் சித்திரவதை செய்த சிறிலங்காப் புலனாய்வாளர்கள்!

sumi

Leave a Comment