27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “வனாத்தே தினுக்க” வின் உதவியாளர் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான  “வனாத்தே தினுக்க” என்பவரின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான  “வனாத்தே தினுக்க” என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீனவர் பிரதிநிதிகளும் பொதுவேட்பாளர் பரப்புரையில்…!

User1

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

User1

Leave a Comment