27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் பொலிஸார் விசாரணை

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான காதலனுடன்  பல மாத காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சந்தேக நபர் இந்த மாணவியுடனான காதல் உறவை திடீரென முறித்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி மாணவியை அச்சுறுத்தி 34,500 ரூபா பணத்தை பெற்றுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் தனக்கு மேலும் 30,000 ரூபா பணம் தேவைப்படுவதாக இந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

பின்னர், இந்த மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குப்பை தொட்டியால் சூழல் மாசடையும் அபாயம்

User1

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குகள் சூறையாடப்படுகின்றதா?

Nila

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

User1

Leave a Comment