28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

உயிருக்காகப் போராடும் யானை : காப்பாற்ற தீவிர முயற்சி

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் காட்டு யானையொன்று நடக்க முடியாத நிலையில் உயிருக்காக போராடி வருகின்றது.

குறித்த யானைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வனஜீவராசிகள் திணைக்களம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அகீல் எமேர்ஜென்ஸி யுனிட் ஆகியன தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் அவர்களின் முயற்சியினால் நீர் வழங்கப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

Related posts

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயக்க கிழக்கு ஆளுனர் முயற்சி: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

User1

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

User1

கிழக்கு ஆளுனர் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும், திருக்கோணேஸ்வர விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் 

User1

Leave a Comment