27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !

மல்லாகம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வலிவடக்கு பிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரரான குறித்த இளைஞர் விளையாட்டில் சிறந்த வீரராக விளங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரசன்னா வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

User1

ஓமந்தையில் கோர விபத்து : புகையிரதம் மோதி பெண் பலி

User1

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

User1

Leave a Comment