27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துlறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் , இளைஞனை யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

Related posts

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு – செய்திகளின் தொகுப்பு

User1

அரச சேவை சம்பள மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

User1

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன்!

User1

Leave a Comment