27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஓமந்தையில் கோர விபத்து : புகையிரதம் மோதி பெண் பலி

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  

Related posts

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை

User1

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் பொலிஸார் விசாரணை

User1

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான் இம்முறையாவது இலக்குத் தவறாது பிரயோகிப்போம்

User1

Leave a Comment