27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் பணத்தினை மோசடி செய்தவரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் செலாவதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டார்.

மீண்டும் இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு பணத்தினை கொடுத்து ஏமாந்தவரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

யாழில் காணி சுவீகரிப்பு-முறியடித்த மக்கள்..!

sumi

பாரதி விளையாட்டுக்கழகம் நடாத்திய மரதன் ஓட்ட நிகழ்வு

User1

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகு கலை நிலைய பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல் !

User1

Leave a Comment