29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி கொப்பேகடுவவின் நினைவேந்தல்!

லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள கொப்பேகடுவவின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயிரிழந்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட முப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1992 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டின் அராலியில் இராணுவ வாகன தொடரணிக்கு மேற்கொண்ட குண்டு தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட பல இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

(படங்கள் இணைப்பு)

Related posts

பணி இடமாற்றத்தால் ஏற்பட்ட மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!

sumi

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.

User1

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

User1

Leave a Comment