27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை!

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் 20 வயதின் கீழ் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச 20வயதுப் பிரிவில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், உடுவில் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் 18வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், பரந்தன் இந்து மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும், அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

உடுவில் மகளிர் கல்லூரியின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறித்த போட்டிககளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்றையதினம் உடுவில் மகளிர் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் செல்வி ரொசானா மதுரமதி குலேந்திரன் அவர்கள்னது தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் விருந்தினர்களாக வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் செந்தில் குமரன், உடுவில் மகளிர் கல்லூரியின் ஆன்மீக குரு ரெப.லிங்கேசன், உடுவில் மகளிர் கல்லூரியின் விளையாட்டு செயலாளர் ப.தர்மகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

செல்வம் எம்.பியின்  தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி.

sumi

யாழில் வீசிய பலத்த காற்று: பாடசாலை ஒன்றில் முறிந்து விழுந்த மரம்

User1

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வெளியான முக்கிய தகவல்

User1

Leave a Comment