27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழpழந்துள்ளார்.

கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது 60) மூன்று பிள்ளைகளின் என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று திங்கள் கிழமை அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளையில் பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியபோதே அவ்விடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரி திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார் வைத்தி சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய் கிழமை சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதம் 2 குடும்பஸ்த்தர்கள் காட்டு யதனையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

sumi

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.!

sumi

கிளிநொச்சியில் தோழர் 30 நிகழ்வு

User1

Leave a Comment