27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைத்த நபர்கள்

புத்தளம் (Puttalam) வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(20) அதிகாலை வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அருகில் இருந்த சிசிரிவி கெமராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அளவுக்கு அதிகமான போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு!

sumi

வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

User1

இலங்கை அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும்!

sumi

Leave a Comment