27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு – யாழில் சம்பவம் !

யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்று திங்கட்கிழமை (26)  உயிரிழந்துள்ளார்.

காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் கையில் கடித்துள்ளது. இந்நிலையில் அவர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு நேற்று திங்கட்கிழமை அதிகாலை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

User1

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

User1

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கோர விபத்து : இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் பலி

sumi

Leave a Comment