28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

இராணுவ லொறி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடனொன்று மோதி விபத்து – ஒருவர் பலி !

பதுளை – மஹியங்கனை வீதியில் திபிரிகஸ்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை தியத்தலாவ இராணுவ முகாமில் இருந்து கண்டி பல்லேகல இராணுவ முகாமிற்கு சென்ற லொறி ஒன்று மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்வான வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்து அகற்றப்பட்டது. 

User1

9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த கயவனுக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

sumi

சொன்னதை சாதித்துக் காட்டிய ஜீவன்!

User1

Leave a Comment